சாதித்தது பெரியார் திராவிடர் கழகம்.

கோவையில் ஆரம்பகட்டத்தில் சேலம் இரயில்வே கோட்டம் உருவாக போரட்டம் நடத்தியவர்கள்,தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள்தான்.
இவர்கள் கோவையில் எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் முன்னனியில் இருந்து போரட்டம் நடத்துபவர்கள்,அப்பொழுது இவர்கள் மட்டும் இரயில்வே துறைக்கு எதிராக போரட்டம் நடத்தி சிறை சென்றார்கள்.
அன்று அவர்களின் போரட்டத்தை கானாத கோவை மக்கள் இன்று சேலம் கோட்டம் உருவாக ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி இருக்கிறார்கள். இன்று 20தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்திருக்கிறார்கள். இது வரவேற்கப்பட வேன்டிய விசயம். ஏனென்றால் இதில் ஒன்றினைந்திருப்பது அதிமுக,திமுக என அனைத்துக்கட்சிகளும் மற்றும் சில பொது அமைப்புகளும் இதில் இனைந்து உள்ளன.
ஒட்டுமொத்த கோவைமக்களும் இதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் சேலம் கோட்டம் உருவாவது உறுதியாகிறது மற்றும் இந்த கோட்டத்தில் கோவை,திருப்பூர் இனைவதும் உறுதியாகிறது.
கேரள முதல்மந்திரி அவர்கள் பாலக்காடு கோட்டத்தை பிரிக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டு கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் முக்கியமாக வருமானம் அதிமாக வரக்கூடிய கோவை, திருப்புர் இரன்டையும் சேலம் கோட்டத்திலயே சேர்க்க வேண்டும் என்றும் இந்த பந்த் நடக்க உள்ளது.
பள்ளிகள் ,கல்லூரிகள்,வனிக நிறுவனங்கள்,தொழிற் நிறுவனங்கள் எதுவும் செயல்படாது.
பஸ்,ஆட்டோ என்று எதுவும் ஓடாது.இது முழுக்க முழுக்க கோவை மக்களின ஆதரவுடன் நடக்கவுள்ள்து.
இப்படி ஒருத்தர் மட்டுமே இழுத்த தேரை ,இன்று ஊர்கூடி இழுக்க வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் பங்கு மகத்தானது.
அவர்கள்தான் இப்பொழது அனைவரயும் இனைத்தது.
இந்த பந்த அவர்கள் முன்னிலையே அனைத்து மக்கள் ஆதரவுடன் நடக்க உள்ளது.
இப்பொழுது அனைத்து சமூக அமைப்புகளும் அவர்களின் படிப்பகத்தை மொய்க்கிறார்கள்.
நாங்களும் இதில் கலந்துகொள்கிறோம் என்று அறிவித்துவிட்டு செல்கிறார்கள்.
ஆகையினால் இந்த போரட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.
சேலம் கோட்டம் உருவாவது உறுதி அதில் கோவை,திருப்பூரும் இனைவதும் உறுதி.
சாதித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம்.






