Monday, February 19, 2007

சாதித்தது பெரியார் திராவிடர் கழகம்.



கோவையில் ஆரம்பகட்டத்தில் சேலம் இரயில்வே கோட்டம் உருவாக போரட்டம் நடத்தியவர்கள்,தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள்தான்.
இவர்கள் கோவையில் எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் முன்னனியில் இருந்து போரட்டம் நடத்துபவர்கள்,அப்பொழுது இவர்கள் மட்டும் இரயில்வே துறைக்கு எதிராக போரட்டம் நடத்தி சிறை சென்றார்கள்.
அன்று அவர்களின் போரட்டத்தை கானாத கோவை மக்கள் இன்று சேலம் கோட்டம் உருவாக ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி இருக்கிறார்கள். இன்று 20தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்திருக்கிறார்கள். இது வரவேற்கப்பட வேன்டிய விசயம். ஏனென்றால் இதில் ஒன்றினைந்திருப்பது அதிமுக,திமுக என அனைத்துக்கட்சிகளும் மற்றும் சில பொது அமைப்புகளும் இதில் இனைந்து உள்ளன.
ஒட்டுமொத்த கோவைமக்களும் இதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் சேலம் கோட்டம் உருவாவது உறுதியாகிறது மற்றும் இந்த கோட்டத்தில் கோவை,திருப்பூர் இனைவதும் உறுதியாகிறது.
கேரள முதல்மந்திரி அவர்கள் பாலக்காடு கோட்டத்தை பிரிக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டு கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் முக்கியமாக வருமானம் அதிமாக வரக்கூடிய கோவை, திருப்புர் இரன்டையும் சேலம் கோட்டத்திலயே சேர்க்க வேண்டும் என்றும் இந்த பந்த் நடக்க உள்ளது.
பள்ளிகள் ,கல்லூரிகள்,வனிக நிறுவனங்கள்,தொழிற் நிறுவனங்கள் எதுவும் செயல்படாது.
பஸ்,ஆட்டோ என்று எதுவும் ஓடாது.இது முழுக்க முழுக்க கோவை மக்களின ஆதரவுடன் நடக்கவுள்ள்து.
இப்படி ஒருத்தர் மட்டுமே இழுத்த தேரை ,இன்று ஊர்கூடி இழுக்க வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் பங்கு மகத்தானது.
அவர்கள்தான் இப்பொழது அனைவரயும் இனைத்தது.
இந்த பந்த அவர்கள் முன்னிலையே அனைத்து மக்கள் ஆதரவுடன் நடக்க உள்ளது.
இப்பொழுது அனைத்து சமூக அமைப்புகளும் அவர்களின் படிப்பகத்தை மொய்க்கிறார்கள்.
நாங்களும் இதில் கலந்துகொள்கிறோம் என்று அறிவித்துவிட்டு செல்கிறார்கள்.
ஆகையினால் இந்த போரட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.
சேலம் கோட்டம் உருவாவது உறுதி அதில் கோவை,திருப்பூரும் இனைவதும் உறுதி.
சாதித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

Thursday, January 11, 2007

தமிழரின் நன்றி திருவிழா



"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."

இது நம் அய்யன் திருவள்ளுவனின் வாக்கு.

அந்த வாக்கிற்கு ஏற்ப நாமும் நம் நன்றியை தெரிவிக்கும் விதமாக
அதை மூன்றுநாள் நன்றி திருவிழாவாக கொன்டாடுகிறோம்.
இதை நான் ஒரு கவிதைநடையாக கூறியுள்ளேன்.


தமிழரின் நன்றி திருவிழா
"நன்றி மறப்பது நன்றன்று
ஆம் இது நம் தமிழ் கடவுளின் வாக்கு

எம் தமிழன் நன்றி மறவான்
தம் விழை பயிர் விதைக்க உயிர் கொடுத்தன எம் நிலங்கள்
அதற்கு வாழ்வு கொடுத்தான் கதிரவன்
இவைகளுக்கு நன்றி என்று படைத்தான் பொங்கலென்று
ஆம் பொங்கல் திருவிழா

நன்றி மறப்பது நன்றன்று
ஆம் எம் தமிழன் நன்றி மறவான்
தம் உழவுக்கு தோல்கொடுத்தன எருதுகள்
அதற்கும் நன்றி என்றான் பொங்கலென்று
ஆம் மாட்டு பொங்கல் திருவிழா

நன்றி மறப்பது நன்றன்று
ஆம் எம் தமிழன் நன்றி மறவான்
எம் தமிழ் மொழிக்கு புகழ் சேர்த்தான்
எம் தமிழ் கடவுள் வள்ளுவன்
அதற்கும் நன்றி என்றான்
திருவள்ளுவர் தினம் எனறு."



கிராமங்களில் இந்த திருவிழாவை நாம் மிக சிறப்பாக கொன்டாடுகிறோம்.
ஆனால் இப்பொழுது சிறிது குறைந்திருக்கிறது,அதை நான் எனது கிராமத்தில் கண்டிருக்கிறேன்.அது எதனால் என்பது தெரியவில்லை.அப்பொழுதெல்லாம் எருதுகள் மீது கரும்பு ,கம்பகதிற் மற்றும் பணம் வைத்து கட்டி விரட்டுவார்கள், அதை பிடிப்பதற்கு என்றே ஒரு குழு ஊரை சுற்றி திரியும் ,ஆனால் இப்பொழுது அதுமாதிரியெல்லாம் யாரும் மாட்டை விரட்டுவதில்லை,
ஒருவேளை அவர்களுக்கு விருப்பம் இல்லையோ ? இல்லை இந்த அவசரயுகத்தில் நேரமில்லையா?
இப்பொழுது தமிழர் திருவிழாவின் அடையாளமாக மிக விமரிசியாக கொண்டாடுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.





நகரத்தில் பொங்கல் குக்கரில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
அரசு விடுமுறை இரண்டுநாள் ஆனால் பெரும்பானமயான தனியார் நிறுவனங்கள் ஒருநாள் தான் விடுமுறை விடுகின்றன.தீபாவளிக்கு கூட இரண்டுநாட்கள் விடுமுறை விடும் நிறுவனங்கள், பொங்கல் மூன்று நாள் தமிழர் திருவிழாவாக இருந்தும் ஒரு நாள் தான் விடுமுறை கொடுக்கின்றனர்.
ஆகயால் நகரத்தில் இருக்கும் மக்கள் நம் தமிழர் திருநாளை பெருவிமரிசியாக கொணடாடுவதில்லை.
இனிமேலாவது நம் திருநாளை வெகுவிமரிசியாக கொண்டாடுவோம்.
தமிழரின் நன்றி திருவிழாவாம் பொங்கல் திருநாளை போற்றுவோம்.


உங்கள் அனைவருக்கும் என் இனிய உள்ளங்கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Monday, December 25, 2006

தலித்தை ஆதரிப்பது மட்டும் சாதி அரசியல் ஆகாதா?

ஆர்குட்டில் சாதியை எதிர்ப்பது பற்றியான விவாதத்தில் ஒரு அய்யங்கார் குழுவில்(community ) இருந்த நன்பரும் உரையாடினார் அதற்கு என்னுடைய பெரியாரியல்வாதி நன்பர் ஒருவர் நீங்கள் எப்படி இதுப்பற்றி பேசலாம? அய்யங்கார் குழுவில் இருந்து கொன்டு என்று கேட்டார்.எனது நன்பர் தலித் குழுவில் இருந்தார்,அதற்கு அந்த பார்ப்பன நன்பர் நீங்கள் மட்டும் தலித் குழுவில் இருக்கலாமா? அது மட்டும் சாதி வெறி இல்லையா என்று கேட்டார்.

அந்த பார்ப்பன சாதி வெறியர் கேட்ட கேள்விக்கு இங்கு பதில்.

தலித் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது மட்டும் சாதி அரசியல் ஆகாதா?
பேராசிரியர் சுப வீரபான்டியன் அவர்கள் எழுதிய "குடும்பமும் அரசியலும்" என்ற நூலில் இதற்கு பதில் அளிக்கிறார் இப்படி,

ஒரு நாளும் ஆகாது . சாதிய அமைப்பு நிலைப்பதாலும்,நீடிப்பதாலும்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும் தொடருமேயன்றி,ஒரு சிறு நன்மையும் அவர்களுக்குக் கிடையாது.சாதிய அடுக்குமுறையை நெஞ்சில் நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மேலும் சில உண்மைகள் நமக்கு விளங்கும்.
சாதி அடுக்கின் மேல்தளத்தில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு,சாதியம் எல்லாவிதமான சமூக உயர்வையும் பெற்றுத் தருகின்றது.சாதி,அவர்களைப் பாதுகாக்கவும் செய்கினறது. சாதி அமைப்பினால் அவர்களுக்கு அனைத்தும் நன்மையே தவிர,ஒரு கேடும் இல்லை.
மற்ற சாதியினருக்கு,அவரவர் எந்த அடுக்கில் உள்ளனர் என்பதையொட்டி,நன்மைகளும்,கேடுகளும் கல்ந்து கிடக்கும்.பார்ப்பன்ர் அல்லாத முற்ப்படுத்தப்பட்ட சாதியினர்,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அச்சாதியினரை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட மக்களே சாதி அடுக்கின் கீள்த்தளத்தில் உள்ளனர்.சாதியின் பெயராலேயே இவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.சாதிய அமைப்பே,இவர்களுக்கு எல்லாவிதமான சமூக இழிவுகளையும் சுமத்தியுள்ளது. இவர்களில் மிக மிகப் பெருபான்மையோர்,பொருளாதாரத்தில் நலிந்து கிடப்பதற்கு சாதியே காரணமாக உள்ளது. சாதி அமைப்பினால்,இவர்களுக்கு அனைத்தும் கெடுதலே தவிர,ஒரு நன்மையும் இல்லை.

இப்போது சொல்லுங்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று யார் விரும்புவார்கள்?
சாதி ஒழிவதால் யாருக்கு நன்மை?

ஆகவே,தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவான நம் செயல்களும்,போரட்டங்களும் சாதி அரசியல் ஆகாது. மாறாக,சாதி ஒழிப்பு அரசியலாகவே அது அமையும்

இது அந்த பார்ப்பன சாதி வெரியனுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.!!

Thursday, December 21, 2006

நான் போற்றும் மூன்று புரட்சியாளர்கள்






இந்த பதிவு " நான் போற்றும் மூன்று புரட்சியாளர்கள்"

இந்த மாபெரும் புரட்சியாளர்களுக்கு என் முதல் வணக்கத்துடன், ஒரு சிறு அறிமுகம் இது.
என்னை கவர்ந்த இந்த மூன்று பேருமே மூன்று வெவ்வேறான இடங்களில் இருந்து வந்தவர்கள் .


முதலாமவர் நமது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இவரைப்பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்ததே.
"நேதாஜி" என்று நம் மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945). இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அதில் இறக்கவில்லை அதற்கு பின் வெகுகாலம் வாழ்ந்தார் என்று கூறுகிறார்கள்.
"சுதந்திரம் என்பது கேட்டு பெறுவது அல்ல" என்ற கொள்கைக்கு ஏற்றார் போல் ஆயுதம் ஏந்தி போராடியவர். இப்படி போராடிய இந்த வீரரின் கடைசிகாலம் சர்ச்சைக்குள்ளானது மிகவும் வேதனைக்குரியது.
இந்த மாவீரக்கு எனது வீரவணக்கம்.


இரண்டாமவர் இன்றைய 'நேதாஜி'மாவீரர் வே.பிரபாகரன்.

தமிழீழத்தின் வல்வெட்டிதுறையில் நவம்பர் 26, 1954, பிறந்த பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் தமிழ் புதுப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். மே 5, 1976ல் தமிழ் புதுப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

இவரை தமிழ்தாயின் இளையமகன் என்றே கூறலாம்.
இவ்வளவு குறைந்த வயதில் ஒரு விடுதலை இயக்கத்தை ஆரம்பித்து தன் இனத்துக்காக போராடும் உன்னதமான மாவீரன்.தமிழரை உலக அரங்கில் தலை நிமிர வைத்த ஒரு உயர்ந்தவன்.
இந்த வீர தமிழனுக்கு எனது இந்த பதிவின் மூலம் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


மூன்றாமவர் சே குவேரா.

"சே குவேரா "என்பது பெயர்ச்சொல் அல்ல விளிச்சொல்லும் அல்ல,அது ஒரு மந்திரம். சோர்ந்த மனதில் ஆற்றலைப் பாய்ச்சித் தளர்ந்த நரம்புகளில் உயிரை ஊட்டும் மந்திரம் அது.
தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் 1928 ஜூன் 14 பிறந்து கியுபாவுக்காக போராடி விடுதலை அடைந்து அமைச்சர் பதவி கிடைத்தும் அதை உதறித்தள்ளி விட்டு மற்றொறு நாட்டின் அதாவது பொலிவிய புரட்சியாளர்களுக்காக போராடி தன் இன்னுயிரை விட்டவர்.தான் ஒரு மருவத்துவராக இருந்தும் அந்த தொழிலை செய்யாமல் புரட்சியாளர்களுக்காக தன் கூடவே பிறந்த காச நோய் பற்றி கவலைப்படாமல் போராடியவர்.
இந்த மானுடப்பிரவாகத்தில் மிக அரிதாகத் தோன்றுகிற மாமனிதர்களில் ஒருவர் சே குவேரா.
இந்த மாபெரும் புரட்சியாளனுக்கு எனது வீர வணக்கம்